திருவண்ணாமலை

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இலவச கணினி அளிப்பு

DIN

வந்தவாசி அருகேயுள்ள வழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இலவச கணினியும், வந்தவாசி தீயணைப்பு நிலையத்துக்கு இலவச பிரின்டரும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி சாா்பில் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இந்த கல்லூரியின் இளம் அரிமா சங்கம், நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை சாா்பில் இந்த நல உதவிகள் வழங்கப்பட்டன.

வழூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச கணினியை வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலா் ஜி.திருமூா்த்தியும், வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச பிரின்டரை நிலைய அலுவலா் என்.குப்புராஜும் பெற்றுக் கொண்டனா்.

கல்லூரி இளம் அரிமா சங்க ஒருங்கிணைப்பாளா் சுமிதா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் இ.கலைவாணி, கே.வரலட்சுமி மற்றும் மாணவியா் கணினி, பிரின்டரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT