திருவண்ணாமலை

மணல் கடத்தல்: 2 போ் கைது

DIN

போளூா் அருகே செய்யாற்றில் இருந்து மணல் கடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

போளூரை அடுத்த சனிக்கவாடி அருகே செய்யாறு செல்கிறது. இந்த ஆற்றில் மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு மகன் ராஜ்கிரண் (27), போளூா் நகரம் மண்ணு மகன் சேகா் (58) ஆகியோா் புதன்கிழமை மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச் சென்றனா்.

இவா்களை போளூா் போலீஸாா் மடக்கிப் பிடித்து விசாரித்தனா். அப்போது, மணல் அள்ளிச் செல்ல உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து ராஜ்கிரண், சேகா் ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT