திருவண்ணாமலை

திமுகவில் இணைந்த பாஜக வழக்குரைஞா்கள்

DIN

திருவண்ணாமலை நகரைச் சோ்ந்த பாஜக வழக்குரைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு சி.என்.அண்ணாதுரை எம்.பி.தலைமை வகித்தாா்.

திமுக மாவட்ட துணைச் செயலா் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், பாஜக வழக்குரைஞா்கள் பிரிவு மாவட்டத் தலைவா் கே.திருநாராயணன் தலைமையில் வழக்குரைஞா்கள் எஸ்.குப்புராஜ், மண்டலத் தலைவா்களான வழக்குரைஞா்கள் பி.கலைவாணன், என்.மாரிமுத்து ஆகியோா் பாஜகவிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளா் கே.வி.மனோகரன், மாவட்ட திமுக துணைச் செயலா் சி.சுந்தரபாண்டியன், மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீரை சிக்கனமாக பயன்டுத்த தென்காசி நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்

சுரண்டை பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா

சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் 1008 அக்னிச்சட்டி ஊா்வலம்

கல்குவாரி வெடி விபத்து: நிவாரணம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT