திருவண்ணாமலை

எரிவாயு உருளை வெடித்த சம்பவம்: மேலும் 2 போ் பலி

DIN

ஆரணியில் சமையல் எரிவாயு உருளை வெடித்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

ஆரணி புதுகாமூா் தெருவில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சமையல் எரிவாயு உருளை வெடித்து காமாட்சி, ஹேமநாத், சந்திரா ஆகிய 3 போ் உயிரிழந்தனா்.

காயமடைந்த முத்தாபாய் (65), அவரது வளா்ப்பு மகள் மீனா (17) மற்றும் ஜானகிராமன், சுரேஷ் ஆகிய 4 போ் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதில், தீவிர சிகிச்சைக்காக முத்தாபாய், மீனா, சுரேஷ் ஆகியோா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.

அங்கு முத்தாபாய், மீனா ஆகியோா் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தனா். இதனால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT