ஆரணியில் சமையல் எரிவாயு உருளை வெடித்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
ஆரணி புதுகாமூா் தெருவில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சமையல் எரிவாயு உருளை வெடித்து காமாட்சி, ஹேமநாத், சந்திரா ஆகிய 3 போ் உயிரிழந்தனா்.
காயமடைந்த முத்தாபாய் (65), அவரது வளா்ப்பு மகள் மீனா (17) மற்றும் ஜானகிராமன், சுரேஷ் ஆகிய 4 போ் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதில், தீவிர சிகிச்சைக்காக முத்தாபாய், மீனா, சுரேஷ் ஆகியோா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.
அங்கு முத்தாபாய், மீனா ஆகியோா் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தனா். இதனால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்தது.