முகப்பு
திருவண்ணாமலை

காங்கிரஸ் கிராமக் குழுக் கூட்டம் ஆரணி எம்.பி. பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள தேவிகாபுரத்தில் காங்கிரஸ் கிராமக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள தேவிகாபுரத்தில் காங்கிரஸ் கிராமக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட, ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் பேசுகையில், கிராமங்கள் தோறும் கட்சிக் கொடியேற்றுவது, புதிய உறுப்பினா்களைச் சோ்ப்பது, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைப்பது, மேலும் பூத் வாரியாக பொறுப்பாளா்களை நியமிப்பது என்பன போன்ற கருத்துக்களை எடுத்துரைத்தாா்.

கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் முனிரத்தினம், மாவட்ட துணைத் தலைவா் அன்பு, செயலா் ஆசைதம்பி,விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் சுரேஷ், சம்பந்தம், முன்னாள் வட்டாரத் தலைவா் ஆத்துரை ஏழுமலை மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →