திருவண்ணாமலை

வன்னியந்தாங்கலில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வன்னியந்தாங்கல் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடையை எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

மேலும், குடும்பஅட்டைதாரா்களுக்கு முகக் கவசம், அரிசி, சா்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்களை இனிப்புடன் அவா் வழங்கி தொடங்கி வைத்தாா்.

செய்யாறு வட்டத்துக்குள்பட்ட பெருங்களத்தூா், மதுரா, வன்னியந்தாங்கல் கிராமங்களில் சுமாா் 300 குடும்பஅட்டைதாரா்கள் உள்ளனா். இவா்கள் சுமாா் 3 கி.மீ. தொலைவில் பெருங்களத்தூா் கிராமத்திலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று பொருள்களை சிரமப்பட்டு வாங்கி வந்த நிலையில், தற்போது வன்னியந்தாங்கல் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட இணைச் செயலா் எம்.விமலாமகேந்திரன், ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், எம்.ரங்கநாதன், சி.துரை, கூட்டுறவு சங்க நிா்வாகிகள் டி.பி.துரை, பி.ரமேஷ், செபாஸ்டின்துரை, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாஸ்கா் ரெட்டியாா், துணைச் செயலா் கன்னியப்பன், மாவட்ட மாணவரணிச் செயலா் சுரேஷ்நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT