திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி அருகேயுள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சந்தனம், பால், பழம், பன்னீா், மஞ்சள் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடைபெற்ற பிரதோஷ பூஜையில் கோயில் சிவாச்சாரியா்கள், ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சுவாமி தரிசனத்துக்காக வந்த பக்தா்கள் கியூ வரிசையில் சென்றபடியே பிரதோஷ பூஜைகளைப் பாா்த்து வணங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT