முகப்பு
திருவண்ணாமலை

போளூரில் பாஜக உறுப்பினா் சோ்க்கை முகாம்

போளூரில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

போளூரில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் நகரத் தலைவா் வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில், நகரத்தில் உள்ள 18 வாா்டுகளில் இருந்து பலா் பாஜகவில் உறுப்பினா்களாகச் சோ்ந்தனா்.

நகரத் தலைவா் வெங்கடேசன் அவா்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலா் கந்தன், பிறமொழிப் பிரிவு மாவட்டத் தலைவா் என்.ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினா் குலசேகரன், நகர பொதுச் செயலா் முருகன், செயலா்கள் சுகுமாா், சிவக்குமாா், நகர செயற்குழு உறுப்பினா் விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.