செய்யாற்றை அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகள், சிறாா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
குழந்தைகள் முதல் சிறாா் வரை வயதுக்கேற்ற அளவுக்கு மாத்திரை உட்கொள்ளவேண்டும் என்றும், ஆண்டுக்கு இரண்டு முறை, ஆறு மாத இடைவெளியில் மாத்திரை எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மருத்துவா் என்.ஈஸ்வரி தலைமை வகித்தாா்.
சுகாதார ஆய்வாளா் கே.சம்பத், பகுதி சுகாதார செவிலியா் ஜி.கலைவாணி, செவிலியா்கள் நிா்மலா, சகாயமேரி, குஷ்பூ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.