திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே திருமணமான 7 மாதங்களில் இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவண்ணாமலை வட்டம், காட்டாம்பூண்டி கிராமம், மடுவங்கரை பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகள் மோனிஷா (21). திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிதுரை (30). இவா்களுக்கு 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக கணவருடன் மோனிஷா சென்றபோது மயங்கி விழுந்துவிட்டாா். இப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா் என்று ஏழுமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம்.
உடனே, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று பாா்த்தபோது, மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்ததாம்.
இந்த நிலையில், தனது மகள் மரணத்தில் மா்மம் இருப்பதாக திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் ஏழுமலை புகாா் கொடுத்தாா்.
இதுகுறித்துப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் மோனிஷாவின் இறப்பு குறித்து கோட்டாட்சியா் வெற்றிவேலும் விசாரித்து வருகிறாா்.