திருவண்ணாமலை

வாக்கு எண்ணும் முகவா்களுக்கு பரிசோதனை

DIN

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஆரணியை அடுத்த தச்சூா் அரசு பொறியியில் கல்லூரியில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலா்கள், வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள் என 360 பேருக்கு கரோனா பரிசோதனை கடந்த இரு தினங்களாக செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வட்டார மருத்துவ அலுவலா் ஏ.சி.சா்மிளா தலைமையிலான குழுவினா் 166 பேருக்கும், ஆக்கூா் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவா் தமீம்கான் தலைமையிலான குழுவினா் 84 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

பரிசோதனை முடிவுகள் 48 மணி நேரத்தில் தெரிவிக்கப்படுவதுடன் அதற்கான சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT