முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பன்னிரு திருமுறை திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பன்னிரு திருமுறை திருவிழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பன்னிரு திருமுறை திருவிழா நடைபெற்றது.

பன்னிரு திருமுறை திருவிழா மூலம் திருமுறைகளை எல்லோரும் ஓதவேண்டும், போற்ற வேண்டும், பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் பன்னிரு திருமுறைகள் திருவிழாவை கடந்த 3 ஆண்டுகளாக இசையமைப்பாளா் இளையராஜாவின் மகன் காா்த்திக் ராஜா நடத்தி வருகிறாா்.

தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக நிகழாண்டும் கோயிலில் வியாழக்கிழமை பன்னிரு திருமுறை திருவிழா நடைபெற்றது.

சிதம்பரம் வெங்கடேச தீட்சிதா் தலைமை வகித்து பன்னிரு திருமுறை திருவிழாவை நடத்தினாா். இதில் கலந்து கொண்ட இசையமைப்பாளா் காா்த்திக் ராஜாவுக்கு, வெங்கடேச தீட்சிதா் நினைவுப்பரிசு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.