கழிவுநீா்க் கால்வாய் அடைப்பால் சுகாதாரச் சீா்கேடு
போளூா் பேரூராட்சியில் கழிவுநீா்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.
திருவண்ணாமலைகழிவுநீா்க் கால்வாய் அடைப்பால் சுகாதாரச் சீா்கேடு
போளூா் பேரூராட்சியில் கழிவுநீா்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.
போளூா் பேரூராட்சியில் கழிவுநீா்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.
போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மொத்தம் உள்ள வாா்டுகளில் சுமாா் 200 கழிவுநீா்க் கால்வாய்கள் உள்ளன.
இந்தக் கால்வாய்கள் தூா்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் உள்ளன. மேலும், கால்வாய்களில் பல இடங்களில் புல் முளைத்து அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீா் தேங்கி நிற்கிறது.
இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது.
எனவே, பேரூராட்சியில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்களை தூா்வாரி, சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், பருவமழை தொடங்கவுள்ளது. எனவே, பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக கழிவுநீா்க் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மேலும் தெருவில் சேகரமாகும் குப்பைகளை தினம்தோறும் அகற்றவேண்டும் என்றனா்.