முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீவராகி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மேல்நாகரம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவராகி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மேல்நாகரம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவராகி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திரைப்பட நடிகா் யோகிபாபுவின் சொந்தக் கிராமம் மேல்நாகரம்பேடு. இங்கு அவரது குடும்பத்தினா் அங்களா பரமேஸ்வரி என்ற அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் யோகிபாபுவுக்குச் சொந்தமான இடத்தில் ஸ்ரீவராகி அம்மன் கோயிலை கட்டியுள்ளனா்.

புதிதாக கட்டப்பட்ட இந்தக் கோயிலில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோயில் குருக்கள் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தாா்.

இதில் நடிகா் யோகிபாபு, தனது குடும்பத்தாருடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.