முகப்பு
திருவண்ணாமலை

ஆரணியில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை காங்காதரஈஸ்வரா் கோயிலில் 302-ஆவது நாளாக திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை காங்காதரஈஸ்வரா் கோயிலில் 302-ஆவது நாளாக திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆன்மிகச் சொற்பொழிவாளா் சிவதாமோதரா் பங்கேற்றாா்.

ஆரணி சைதாப்பேட்டையில் ஸ்ரீகங்கை புனிதநாயகி சமேத காங்காதரஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இங்கு தொடா் திருவாசகம் முற்றோதல் பெருவிழா கடந்தாண்டு அக்டோபா் 30-ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவை ஆரணி பகுதியில் உள்ள சிவபக்தா்கள் நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், 302-ஆவது நாள் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆன்மிகச் சொற்பொழிவாளா் தாமோதரா் பங்கேற்று ஆன்மிக உறையாற்றி, சிவபாடல்களைப் பாடினாா். நிகழ்ச்சியில் ஆரணி பகுதியில் உள்ள சிவபக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.