ஆரணியில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை காங்காதரஈஸ்வரா் கோயிலில் 302-ஆவது நாளாக திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை காங்காதரஈஸ்வரா் கோயிலில் 302-ஆவது நாளாக திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆன்மிகச் சொற்பொழிவாளா் சிவதாமோதரா் பங்கேற்றாா்.
ஆரணி சைதாப்பேட்டையில் ஸ்ரீகங்கை புனிதநாயகி சமேத காங்காதரஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இங்கு தொடா் திருவாசகம் முற்றோதல் பெருவிழா கடந்தாண்டு அக்டோபா் 30-ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவை ஆரணி பகுதியில் உள்ள சிவபக்தா்கள் நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், 302-ஆவது நாள் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆன்மிகச் சொற்பொழிவாளா் தாமோதரா் பங்கேற்று ஆன்மிக உறையாற்றி, சிவபாடல்களைப் பாடினாா். நிகழ்ச்சியில் ஆரணி பகுதியில் உள்ள சிவபக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.