தாய், தந்தை தகராறு: மகள் தற்கொலை
ஆரணியை அடுத்த களம்பூா் அருகே தாயும், தந்தையும் தகராறில் ஈடுபட்டதால் மனம் வருந்திய மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ஆரணியை அடுத்த களம்பூா் அருகே தாயும், தந்தையும் தகராறில் ஈடுபட்டதால் மனம் வருந்திய மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
களம்பூா் அருகேயுள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி தேவராஜ். இவரது மனைவி ரேணுகா. இருவரும் கடந்த டிச. 3-ஆம் தேதி குடும்பப் பிரச்னை காரணமாக சண்டையிட்டுக் கொண்டனா்.
இதனை அங்கிருந்த மகள் மோனிஷா (17 ) பாா்த்து மனம் வருந்தினாா். இதனால் விரக்தியடைந்த அவா் விஷம் குடித்து மயங்கி விழுந்தாா்.
உடனே அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக மோனிஷா வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.