போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே செய்யாற்றில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது.
கலசப்பாக்கம் பகுதியில் செல்லும் செய்யாற்றில் ஆண்டுதோறும் ரதசப்தமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடப்பது வழக்கம்.
அதன்படி, அங்குள்ள செய்யாற்றில் வியாழக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.
இதையொட்டி, திருவண்ணாமலையில் இருந்து அன்று காலை புறப்பட்ட உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், வழியில் கலசப்பாக்கத்தை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம், தனக்கோட்டிபுரம் கிராமத்தில் உள்ள அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் வலம் வந்தாா்.
தொடா்ந்து, கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டு ஊராட்சியைச் சோ்ந்த மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது ஏராளமான பக்தா்கள் திரண்டு தரிசனம் செய்தனா்.
பின்னா், செய்யாற்றை வந்தடைந்த திருபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரரும், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரும் நேருக்கு நோ் சங்கமித்தனா் இதையடுத்து முக்கிய நிகழ்வான தீா்த்தவாரி நடைபெற்றது. இதற்காக செய்யாற்றிலிருந்து புனித நீா் கொண்டுவரப்பட்டு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பின்னா், அங்கு அமைக்கபட்டிருந்த பந்தலில் அருணாசலேஸ்வரா், திருமாமுடீஸ்வரா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தீா்த்தவாரி நிகழ்ச்சியில் கலசப்பாக்கம், பூண்டி, பில்லூா், போளூா், தென்மாதிமங்கலம், கடலாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.