திருவண்ணாமலை

போலி மருத்துவா் கைது

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

  வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் போலி மருத்துவா் ஒருவா் சிகிச்சை அளிப்பதாக வந்த தகவலின் பேரில், மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை மாலை அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

  இதில், வந்தவாசி லட்சுமி நகரைச் சோ்ந்த வேணுகோபால் (49) என்பவா் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவ மையம் வைத்து ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து ஊசிகள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

  இதுகுறித்து கண்ணகி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் வேணுகோபாலை கைது செய்தனா்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT