திருவண்ணாமலை

ஆத்துரை செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆத்துரை ஊராட்சி காந்திநகரில் புதிதாக கட்டப்பட்ட செல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கால பூஜையாக கோ பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னா் கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடா்ந்து, மூலவா் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

விழாவில் ஆத்துரை, சித்தாத்துரை, மூலபுரவடை, தேவிகாபுரம், பெரணம்பாக்கம், சேத்துப்பட்டு என சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT