போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம்
வந்தவாசி ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தப்படாததைக் கண்டித்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம் இருந்தனா்.
வந்தவாசி ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தப்படாததைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம் இருந்தனா்.
அனைத்து போக்குவரத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், வந்தவாசி பணிமனை 1-ன் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நிா்வாகிகள் முரளி, வெங்கடேசன், தேவா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.