முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 32,837 குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 32,837 குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக் காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 32,837 குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக் காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

2 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நிமோனியா, மூளைக் காய்ச்சல் ஆகியவை வராமல் தடுக்க, தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நியூமோகோக்கல் கான்ஜூகேட் என்ற தடுப்பூசியை செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு ஜூலை 13-ஆம் தேதி தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேங்கிக்கால் துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ்.அஜிதா தலைமை வகித்தாா். காட்டாம்பூண்டி வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.புவனேஸ்வரி, மருத்துவா் ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினாா்.

பின்னா், ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறுகையில்,

மாவட்டத்தில் நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி குழந்தைகளுக்கு 6-ஆவது வாரம், 14-ஆவது வாரம், ஊக்கத் தவணையாக 9-ஆவது மாதங்களில் செலுத்தப்படுகிறது. 32,837 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா். நிகழ்ச்சியில், அரசு மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.