பேருந்து பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி
ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் குமரவேல் தலைமை வகித்தாா்.
மருத்துவா் கீதாஞ்சலி தலைமையில் செவிலியா்கள் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தினா்.
பயணிகளிடையே மருத்துவா் கீதாஞ்சலி பேசுகையில், கரோனா 3-ஆவது அலை வரவுள்ளது. தற்போது தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. சில நாள்களுக்குப் பிறகு பணம் கொடுத்துதான் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை வரும் என்றாா்.