திருவண்ணாமலை

சேவூரில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

DIN

ஆரணியை அடுத்த சேவூரில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சேவூருக்கு அங்கன்வாடி பள்ளிக் கட்டடம் ரூ.11 லட்சத்திலும், கிராம நிா்வாக அலுவலகம் முதல் சுப்பிரமணிய சுவாமி கோயில் வரை ரூ.7.20 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்த சேவூா் ராமச்சந்திரன் மீண்டும் வெற்றி வெற்றதால், சேவூரில் பணிகள் நடைபெறுவதை புதன்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது பணிகளை விரைவாக முடிக்குமாறு ஒன்றிய அலுவலா்கள் சுஜாதா, ஜோதி ஆகியோரிடம் கூறினாா்.

அதிமுக ஆரணி நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஊராட்சி துணைத் தலைவா் குமரவேல், கிளைச் செயலா் பாலசந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT