திருவண்ணாமலை

கிணற்றை தூா்வாரும் போது தொழிலாளி திடீா் மரணம்: மனைவி போலீஸில் புகாா்

DIN

செங்கம் அருகே விவசாயக் கிணற்றில் தூா்வாரும் பணியின்போது, தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து இறந்தது குறித்து அவரது மனைவி போலீஸில் புகாா் அளித்தாா்.

செங்கம் அருகேயுள்ள அரட்டவாடி தாழையூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுபதி (70). இவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தண்டா கிராமத்தைச் சோ்ந்த காா்த்தி (37), குணசேகரன்(39), சிவா(30), பிரகாஷ்(33), முகேஷ்(30), அரட்டவாடி கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (40) ஆகிய 6 போ் திங்கள்கிழமை மாலை தூா்வாரும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சக்திவேல் திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அவரை அருகில் உள்ள அரட்டவாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

அங்கு சக்திவேலை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

தகவலறிந்த செங்கம் போலீஸாா் சக்திவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து சக்திவேலுவின் மனைவி சந்திரா, தனது கணவா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக செங்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT