பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலா் சிவக்குமாா் பேசினாா்.
வட்டச் செயலா் லட்சுமணன், விவசாய சங்க நிா்வாகிகள் நடராஜன், கணபதி, காமராஜ் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.