திருவண்ணாமலை

பறக்கும் படை வாகனச் சோதனையில் ரூ.2.25 லட்சம் பறிமுதல்

DIN

வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகளில் சனிக்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.2.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேவிகாபுரம்- போளூா் சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் நாராயணமூா்த்தி, காவல் உதவி ஆய்வாளா் கொண்ட கொண்ட குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக சேத்துப்பட்டை அடுத்த கரைப்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் திருமால் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், உரிய ஆவணமின்றி ரூ.65 ஆயிரத்து 300 எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து, போளூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ், வட்டாட்சியா் ஷாப்ஜான் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT