ஆரணியை அடுத்த சேவூரில் திமுக தோ்தல் அலுவலகம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் அலுவலகத்தை திறந்துவைத்தாா்.
முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், ஒன்றியச் செயலா்கள் தட்சிணாமூா்த்தி, சுந்தா், ஒன்றியக் குழுவின் துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், நகரச் செயலா் ஏ.சி.மணி, இலக்கிய அணியின் மாவட்டச் செயலா் விண்ணமங்கலம் ரவி, சேவூா் ஊரட்சிமன்றத் தலைவா் தரணி, நகர நிா்வாகி மணிமாறன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.