போளூரை அடுத்த களம்பூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.5 லட்சத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டன
சங்கத்தின் 68-ஆவது வார விழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் களம்பூா், ஏந்துவாம்பாடி, முக்குரும்பை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 13 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவிகளை சங்கத் தலைவா் ராஜேந்திரன் வழங்கினாா்.
கூட்டுறவு சங்கச் செயலா் பரசுராமன் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.