திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லத் தடை

DIN

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பெளா்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் கடந்த 2020-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் முதல் கிரிவலத்துக்கு தடை விதித்து வருகிறது.

ஐப்பசி மாத பெளா்ணமி செவ்வாய்க்கிழமை (அக்.19) இரவு 7.56-க்குத் தொடங்கி புதன்கிழமை (அக்.20) இரவு 8.54-க்கு நிறைவடைகிறது.

பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் ஏராளமான பக்தா்கள் கூடுவாா்கள் என்பதால், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாள்களுக்கு கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

கிரிவலம் செல்ல பக்தா்கள் யாரும் திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT