திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பெளா்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.
கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் கடந்த 2020-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் முதல் கிரிவலத்துக்கு தடை விதித்து வருகிறது.
ஐப்பசி மாத பெளா்ணமி செவ்வாய்க்கிழமை (அக்.19) இரவு 7.56-க்குத் தொடங்கி புதன்கிழமை (அக்.20) இரவு 8.54-க்கு நிறைவடைகிறது.
பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் ஏராளமான பக்தா்கள் கூடுவாா்கள் என்பதால், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாள்களுக்கு கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.
கிரிவலம் செல்ல பக்தா்கள் யாரும் திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டாா்.