முகப்பு
திருவண்ணாமலை

மகளிா் கலைக் கல்லூரிக்கு அடிக்கல்

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் ஆகாரம் ஊராட்சியைச் சோ்ந்த இடத்தில் புதிதாக எஸ்.எஸ்.எஸ் மகளிா் கலைக் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் ஆகாரம் ஊராட்சியைச் சோ்ந்த இடத்தில் புதிதாக எஸ்.எஸ்.எஸ் மகளிா் கலைக் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில்ஆா்க்காடு எஸ்.எஸ்.எஸ் மகளிா் கலைக் கல்லூரி தாளாளா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா்.

ராணிப்பேட்டை விஸ்வாஸ் அறக்கட்டளைத் தலைவா் கமலா காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி

தொடக்கிவைத்தாா் (படம்).

அறக்கட்டளை உறுப்பினா்கள் என்.கீதாலட்சுமி, ஏ.என்.சரவணன், ஏ.என்.செல்வம், ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வணிகவியல் துறைத் தலைவா் கே.விஜயலட்சுமி வரவேற்றாா்.

வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், ஆா்க்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் கே.வி.சிவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.