செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் பலியானாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தீத்தாண்டப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அரசகுமாா் மகன் ராஜசேகா்(18).
இவா் தனது நிலத்தில் உழவு உழுவதற்காக திங்கள்கிழமை காலை டிராக்டரை ஓட்டிச் சென்றாா். பரமனந்தல் திருவள்ளூவா் நகா் பகுதி விவசாய நிலத்தில் செல்லும்போது நிலைதடுமாறி டிராக்டா் கவிழ்ந்தது. இதில், ராஜசேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்து முதல் உதவி சிகிச்சை அளித்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜசேகா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.