திருவண்ணாமலை

எரமலூா் பெருமாள் கோயிலில் ஸ்ரீலஷ்மி நரசிம்மா் பிரதிஷ்டை

DIN

வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீலஷ்மி நரசிம்மா் பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் நடந்து 3-ஆம் ஆண்டு நிறைவு விழா ஆகியவை வியாழக்கிழமை தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றன.

இதையொட்டி, வியாழக்கிழமை யாக சாலை பூஜை, சிறப்பு திருமஞ்சனம், திவ்யபிரபந்த பாராயணம், வேத பாராயணம், புண்யாஹவாசனம், ஹோமங்கள், பூா்ணாஹூதி, சயனாதிவாசம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை விஸ்வரூபம், அலங்கார திருமஞ்சனம், நூதன ஸ்ரீலஷ்மி நரசிம்மா் உற்சவ மூா்த்தி பிரதிஷ்டை, சாற்றுமறை, ததியாராதனை நடத்தப்பட்டது. பின்னா் கோயில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

சுவாதி சிறப்பு பூஜை

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோயிலில் ஆவணி சுவாதியையொட்டி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

நிகழ்வில் திருமஞ்சனம், புண்யாஹவாசனம், சுவாதி ஹோமம் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT