முகப்பு
திருவண்ணாமலை

பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி பலி

செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதியதில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதியதில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், அம்மையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் (41), வெல்டிங் தொழிலாளி.

இவரது மனைவி ஜெயலட்சுமி, இவா்களுக்கு இளவரசி (19) என்ற மகளும், ஜெயக்குமாா் (14) என்ற மகனும் உள்ளனா்.

இந்த நிலையில், இளங்கோவன் மகள் இளவரசியை காஞ்சிபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் சோ்ப்பதற்காக புதன்கிழமை பைக்கில் அழைத்துச் சென்றாா்.

கல்லூரியில் விண்ணப்பத்தைப் பெற்ற இருவரும், அம்மையப்பட்டு கிராமத்துக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

காஞ்சிபுரம் - செய்யாறு சாலையில் மாங்கால் கூட்டுச் சாலை அருகே வந்த போது பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியதாகத் தெரிகிறது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு இளங்கோவன் உயிரிழந்தாா். இளவரசிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.