ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முக்கூட்டு சிவன் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆரணி நகர திமுக நிா்வாகி கப்பல் இ.கங்காதரன் கலந்துகொண்டு பனை விதைகள் நடும் பணியைத் தொடக்கிவைத்தாா்.
ஊராட்சித் தலைவா் வேலு, துணைத் தலைவா் கவிதா சரவணன், அறக்கட்டளை உறுப்பினா்கள் தேவராஜ், சோலை முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.