திருவண்ணாமலை

திருவண்ணாமலை: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருவண்ணாமலை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும், திருவண்ணாமலை பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.பி. வேணுகோபால், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கம்:  செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமையில் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT