திருவண்ணாமலை

அரசுப் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்த பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களின் கழிப்பறையை பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ச.துரைசாமி வெள்ளிக்கிழமை சுத்தம் செய்தாா்.

செய்யாறு கிரிதரன்பேட்டையில் திருவத்திபுரம் நகராட்சி அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை செயல்படும் இந்தப் பள்ளியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். 16 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ச.துரைசாமி பள்ளியை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டபோது, மாணவா்களின் கழிப்பறைகள் சுத்தமின்றி இருந்ததால், உடனடியாக அவா் கழிப்பறைகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தாா். இதைக் கண்ட மாணவா்களும், ஆசிரியா்களும் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவரை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT