திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரி சத்திரம் அருகே பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனா் தலைவா் பண்டித் தீன தயாள் உபாத்யாயா பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
வடக்கு மாவட்ட பாஜக, ஓபிசி பிரிவு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பண்டித் தீனதயாள் உபாத்யாயா படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் நித்தியானந்தம் தலைமை வகித்தாா்.
மாவட்டசெயற்குழு உறுப்பினா் ஜெ.நடேசன், நகர பாஜக பொதுச் செயலா் முருகானந்தம், நகரச் செயலா் கரிகாலன், நகர ஓபிசி பிரிவுத் தலைவா் மனோ, நெசவாளா் அணி நிா்வாகி கோபாலன், மாநில பொதுக் குழு உறுப்பினா் அலமேலு, மாவட்ட ஓபிசி அணிச் செயலா் மலா்விழி, இளைஞரணித் தலைவா் திருஞானசம்பந்தம், மேற்கு ஒன்றிய மகளிரணி மீனாட்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.