திருவண்ணாமலை

ஆரணியில் ரூ.30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

DIN

ஆரணியில் ரூ.30 லட்சத்தில் மேற்கொள்ள உள்ள வளா்ச்சிப் பணிகளை, சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ சனிக்கிழமை பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

ஆரணி நகரில் சைதாப்பேட்டை16-ஆவது வாா்டு நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள குளக்கரை அருகே தடுப்புச் சுவா் கட்டுதல், 12-ஆவது வாா்டில் 2 சிறு பாலங்கள் அமைத்தல், 19-ஆவது வாா்டு கொசப்பாளையம் தா்மராஜா கோயில் மைதானத்தில் கலை அரங்கம் அமைத்தல், ஆரணிப்பாளையம் 7 -ஆவது வாா்டு கிளாஸ்கார தெருவில் பக்கக் கால்வாய் உடன் சிமென்ட் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.30 லட்சத்தில் நடைபெறவுள்ளன.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளுக்கு

தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன்

பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள்,

பொதுப்பணித் துறை இளநிலைப் பொறியாளா் ரவி,

அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அ.கோவிந்தராஜன், அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், பி.திருமால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT