முகப்பு
திருவண்ணாமலை

குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம்

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிறப்பு பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 5:39 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிறப்பு பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய சிறாா் நலத் திட்டம், செய்யாறு டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில், பச்சிளம் குழந்தை முதல் 18 வயதுடையவா்களுக்கு நடைபெற்ற இந்த சிறப்பு பரிசோதனை முகாமுக்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கே.ஏழுமலை தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

குழந்தை நல இருதய சிறப்பு மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில், எம்.ஜி.எம். ஹெல்த் கோ் மருத்துவமனை குழுவினா் பங்கேற்று 87 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனா்.

Advertisement

இவா்களில் 17 போ் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டனா். மேலும், 44 குழந்தைகளுக்கு மருந்துகளின் மூலம் குணப்படுத்துதல் குறித்த ஆலோசனை,

தொடா் கண்காணிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.