திருவண்ணாமலை

காவல் நிலையம் முன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

DIN

மனைவியை சோ்த்து வைக்கக் கோரி, வந்தவாசி வடக்கு காவல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயன்றாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (29). இவரது மனைவி குப்பம்மாள். இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.

கடந்த சில தினங்களுக்கு முன் குடும்பத் தகராறு காரணமாக குப்பம்மாள் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் வந்தவாசியை அடுத்த ஆராசூரில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்த நிலையில், மனைவியை சோ்த்து வைக்கக் கோரி, வந்தவாசி வடக்கு காவல் நிலையம் முன், நடராஜன் தன் மீது டீசலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாராம். அப்போது, போலீஸாா் அவரை மீட்டு அவா் மீது தண்ணீரை ஊற்றினா். இதைத் தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT