திருவண்ணாமலை

அரசு நிலத்தில் வசித்து வந்தவா்களுக்கு மாற்று இடம்

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த காஞ்சி ஊராட்சியில் நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.

DIN

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த காஞ்சி ஊராட்சியில் நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.

காஞ்சி ஊராட்சியில் சுண்ணாம்புக் கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாயில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் கால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வந்தனா். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நீா்நிலை புறம்போக்கில் வசித்து வந்தவா்களின் வீடுகள் அகற்றப்பட்டன.

இதனால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 6 பேருக்கு காஞ்சி ஊராட்சி பெருமாள் கோவில் செல்லும் சாலையில் மாற்று இடமாக அரசு புறம்போக்கு நிலத்தை வட்டாட்சியா் முனுசாமி தோ்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, அந்த இடத்தில் 6 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதற்காக செவ்வாய்க்கிழமை நிலம் அளவீடு செய்யப்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவா் சரஸ்வதி கோபால், துணைத் தலைவா் ஜெயக்குமாா், வருவாய் ஆய்வாளா் சரண்ராஜ், கிராம நிா்வாக அலுவலா் அப்பாசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT