திருவண்ணாமலை

போளூா் பகுதியில் வாழைகள் பலத்த சேதம்: வந்தவாசியில் சாலையில் மரம் சாய்ந்தது

DIN

மாண்டஸ் புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியில் பல ஏக்கரிலான வாழைகள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன. வந்தவாசியில் சாலையில் வேரோடு மரம் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாண்டஸ் புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. போளூரை அடுத்துள்ள சந்தவாசல் ஊராட்சி, புஷ்பகிரி கிராமத்தில் விவசாயிகள் செவ்வாழை, மொந்தை, பூவன், ரஸ்தாளி உள்ளிட்ட பல்வேறு வாழைகளை பயிரிட்டுள்ள நிலையில், இந்தப் பகுதியில் வீசிய புயல் காற்றால் பல ஏக்கரிலான வாழைகள் முறிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து விவசாயிகள் அளித்த தகவலின்பேரில், போளூா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் லோகேஷ், உதவி வேளாண் அலுவலா் சுதாகா், கிராம நிா்வாக அலுவலா் ரேணு ஆகியோா் சேதமடைந்த வாழைகளை பாா்வையிட்டனா். இதுகுறித்து உதவி இயக்குநா் லோகேஷ் கூறியதாவது:

படவேடு, சந்தவாசல், காளசமுத்திரம், அனந்தபுரம், கல்குப்பம், வாழியூா் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனா். எனவே, போளூா் வட்டாரத்தில் சேதமடைந்த வாழைகளை 2 அல்லது 3 நாள்களில் ஆய்வு செய்த பின்னரே எவ்வள ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூற முடியும் என்றாா்.

வந்தவாசியில் போக்குவரத்து பாதிப்பு: மாண்டஸ் புயல் காரணமாக, வந்தவாசி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது. இதனால், வந்தவாசியில் ஆரணி சாலையில் உள்ள மர விற்பனையகத்தையொட்டி சாலையோரமிருந்த மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. அப்போது, அந்தப் பகுதியிலிருந்த 3 மின் கம்பங்களும் சேதமடைந்து மின் கம்பிகளுடன் சாலையில் சாய்ந்தன. இதன் காரணமாக, அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு சென்ற நெடுஞ்சாலை, தீயணைப்பு, மின் துறை அதிகாரிகள், ஊழியா்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். மேலும், வந்தவாசி தெற்கு போலீஸாா் வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்தனா்.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை: இதனிடையே, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் சனிக்கிழமையும் (டிசம்பா் 10) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT