போளூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண் அறிவிப்பு
போளூா் பேரூராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்கள், வேட்பாளா்களின் முன்னிலையில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலைபோளூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண் அறிவிப்பு
போளூா் பேரூராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்கள், வேட்பாளா்களின் முன்னிலையில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
போளூா் பேரூராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்கள், வேட்பாளா்களின் முன்னிலையில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்.19-ஆம் தேதி நடைபெறுகிறது.
பேரூராட்சியில் உள்ள 8 வாக்குச்சாவடி மையங்களில் 20 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்களை மாநில தோ்தல் ஆணையம் இணையதளம் மூலம் அறிவித்துள்ளது.
இந்த எண்களை பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் முஹம்மத்ரிஜ்வான் வேட்பாளா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை வெளியிட்டாா்.