முகப்பு
திருவண்ணாமலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

செங்கம் அருகே மலைக் கிராம ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

செங்கம் அருகே மலைக் கிராம ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள ஊா்கவுண்டனூா் கிராம ஊராட்சியில், ஊரக வேலைத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள், உரியவா்களுக்கு வேலை வழங்காத நிா்வாகம் மற்றும் அதன் தலைவரைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிளைச் செயலா் குமாா் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தாா். செங்கம் வட்டச் செயலா் சா்தாா் வரவேற்றாா்.

மாவட்டச் செயலா் முத்தையன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் இரா.தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.