கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?
கத்தாரின் எரிவாயு ஆலை மீதான தாக்குதலால் உலகளாவிய எரிவாயு விநியோகத்தில் கணிசமான பாதிப்பு ஏற்படும் அபாயம்
கத்தாரின் எரிவாயு ஆலை மீதான தாக்குதலால் உலகளாவிய எரிவாயு விநியோகத்தில் கணிசமான பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எரிபொருள் உற்பத்தி மையங்களைக் குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஈரான் நடத்திய தாக்குதலில் கத்தார் எனர்ஜி நிறுவனம் பாதிப்புக்குள்ளானதில், உலகளாவிய எரிவாயு விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் மீதான ஈரான் தாக்குதலின் விளைவாக, கத்தாரின் ஏற்றுமதி திறன் 17 சதவிகித அளவுக்கு பாதிப்படைந்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 1.28 கோடி டன் வரை உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், எரிவாயு விநியோகம் 3 முதல் 5 ஆண்டுகள் வரையில் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக முக்கிய எரிவாயு விநியோக நாடான கத்தாரில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் எதிரொலிக்கும்.
இதனைத் தொடர்ந்து, கத்தாருடன் நீண்டகால கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளுக்கு, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு இல்லாமல், சாத்தியமுள்ள அளவே ஏற்றுமதி செய்ய இயலும் என்று நிறுவனத்தின் தரப்பிலிருந்து அவசரகால அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், இந்தியா உள்ளிட்ட நேரடி ஒப்பந்த நாடுகள் உடனடியாக பாதிப்படைவதுடன், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலை உயரும்.
India sees Qatar LNG supply cut after Iran strike
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.