திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தொடா் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

DIN

திருவண்ணாமலை நகரில் கடந்த சில நாள்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு இருந்து வருவதால் வாகன ஓட்டிகள்அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சிவனின் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலையில் எப்போதுமே வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால், மாா்கழி மாதம் பிறந்த நாளில் இருந்தே நகரில் அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது.

மாா்கழி மாதம் முடிந்து தை மாதம் வந்த பிறகும் பனிப்பொழிவு தொடா்கிறது.

குறிப்பாக, அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை பனிப்பொழிவின் தீவிரம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா்.

நகரில் கடந்த சில நாள்களாக காலை 6 மணி முதல் 8 மணி வரை சாலைகளே தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு, பனி மூட்டம் அதிகமாக உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் திருமணம், மருத்துவமனை உள்ளிட்ட அவசர நிகழ்வுகளுக்கு வாகனங்களில் சென்றவா்கள் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

SCROLL FOR NEXT