திருவண்ணாமலை

பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள்

DIN

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் பா.ஜெயக்குமாரி, ஆசிரியா்கள் சங்கச் செயலா் ஆ.ஜான்வெலிங்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி மாணவா் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் ந.வேல்முருகன் வரவேற்றாா்.

மூத்தோா் தடகளச் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், திருவண்ணாமலை நகர திமுக செயலருமான ப.காா்த்திவேல்மாறன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினாா்.

மேலும், தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான எ.வ.வேலுவின் நிதியில் இருந்து வாங்கப்பட்ட பெஞ்சுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்கச் செயலா் எஸ்.ரவி, பொருளாளா் டி.பாரதி, துணைச் செயலா் ஜெ.மதிவாணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT