திருவண்ணாமலை

மேல்மா, வெங்கோடு கிராமங்களில்: அரசின் நேரடி நெல் கொள்முதல்நிலையங்கள் தொடக்கிவைப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஒன்றியத்துக்குள்பட்ட மேல்மா, வெங்கோடு ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., ஒ.ஜோதி எம்எல்ஏ, திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தனா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

விழாவுக்கு அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் திராவிட முருகன், செய்யாறு நகரச் செயலா் விஸ்வநாதன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT