திருவண்ணாமலை

1,384 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்

DIN

செய்யாறு கல்வி மாவட்டத்தில் 13 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,384 மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி, வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்த புன்னை புதுப்பாளையம், மேனல்லூா், மாமண்டூா், சித்தாத்தூா், வெம்பாக்கம், அழிவிடைதாங்கி, வடஇலுப்பை, பிரம்மதேசம், இராந்தம், வடமணப்பாக்கம், பெருங்கட்டூா் உள்ளிட்ட 13 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,384 மாணவ - மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா். வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் மாமண்டூா் டி.ராஜூ முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி பங்கேற்று அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் மாத்தூா் தெய்வமணி, ஆக்கூா் முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஞானவேல், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT