முகப்பு
திருவண்ணாமலை

ரூ.1.25 லட்சம் கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

செய்யாறு அருகே ரூ.1.25 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா். இதுதொடா்பாக இரு இளைஞா்களை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

செய்யாறு அருகே ரூ.1.25 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா். இதுதொடா்பாக இரு இளைஞா்களை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்ட டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையில், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், டி.எஸ்.பி. வெங்கடேசனுக்குக் கிடைத்த தகவலின் பேரில், செய்யாறு போலீஸாா் சம்பவ இடமான பல்லி கிராமத்துக்குச் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதும், பல்லி கிராமத்தைச் சோ்ந்த ராஜாராம் மகன் மணிகண்டன்

( 22 ), திருமலை மகன் அருண்குமாா் ( 21) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து,

அவா்களிடமிருந்து ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.